Saturday 18th of May 2024 09:06:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஈராக்கில் இன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் நால்வர் பலி: 17 பேர் காயம்!

ஈராக்கில் இன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் நால்வர் பலி: 17 பேர் காயம்!


ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சதர் நகரத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சதர் நகரில் உள்ள ஒரு பாவிக்கப்பட்ட உபகரணங்கள் விற்கும் பரபரப்பான சந்தைப் பகுதியில் இந்தக் கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

கடந்த ஜனவரி மாதம் பாக்தாத்தில் உள்ள நெரிசலான சந்தையில் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் கு32 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது கொடிய தாக்குதலாக இன்றை குண்டுத் தாக்குதல் பதிவாகியுள்ளது.

ஈராக்கிய தலைநகரில் அன்றாட நிகழ்வாக இருந்த குண்டுத் தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் 2017 இல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பின்ன ஈராக்கில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE